Wednesday, March 2, 2011

தபு சங்கர்கள் ஜாக்கிரதை!!!

நம் காதல் சொல்ல
புதுமொழியாய்
உன் புன்னகையும்;
என் கையெழுத்து!



அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!



உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை..,
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்துப் பார்க்கிறது!


வேறெவரும் தருவதற்கில்லை;
ஊராரும் பெறுவதற்கில்லை;
எனக்கே எனக்காய்
நீ!


மெல்லச் சிரிக்கிறாயா,
சோம்பல் முறிக்கிறாயா,
தெரியவில்லை;
இங்கு புரையேறித் துடிக்கிறது
காதல்!

Thursday, February 17, 2011

டும் டும் டும்


விஜிபி உலா அடுத்த நாளும் தொடர்ந்தது... காலை 9.30மணிக்கு ஆரம்பிச்சா சாயந்தரம் “அப்பா தேடுவாரே(திட்டுவாரே)ன்னு என் மண்டைக்கு உறைக்கற வரைக்கும் உட்கார்ந்து பேசிட்ட்ட்ட்டே இருப்போம்... விஜிபியில் அடிக்கடி பெங்காலி டூரிஸ்டுக்கள் ஹிப்ஹாப் வண்டிகளில் வந்திறங்குவது வழக்கம்... ஏன் நான் வட இந்தியர்கள் என்று சொல்லாமல் பெங்காலி என்று சொல்கிறேன்னு இந்த இடத்தில என்னை யாராச்சும் டவுட்டு கேக்கணும்.(யாரும் கேக்க மாட்டீங்களே...) சரி, நானே சொல்றேன்

வங்காளத்தில் திருமணம் செய்யும் பெண்ணின் கைகளில் சங்கு வளையலும் சில சிகப்பு கண்ணாடி வளையல்களும் அணிவிப்பார்கள். நாம் தாலி கட்டுவது போலத்தான் இதுவும். (ஜெனரல் நாலெட்ஜ்...) அவர்கள் கைகளை பார்த்தாலே வங்காளிகள் என்று தெரிந்துக்கொள்ளலாம். இப்படித்தான் நானும் அந்த டூரிஸ்டுகளை இனங்கண்டு ஜாக்கிடம் சொல்ல, அவரும் “அப்படியா?” என்று வாயத்தொறந்து கேட்டுக்கிட்டார்.

உட்கார்ந்து உட்கார்ந்து கால் வலிக்க ஆரம்பிச்சா, நாங்கள் எழுந்து போய் கடற்கரையில் நிற்பது வழக்கம்(முன் நாள்லயிருந்துதான்). அப்படி போகும் போது அங்கங்கே மணலில் கடை விரித்திருப்பார்கள். பொழுது போகாமலும், ஜாக்கு பர்ஸுக்கு வேட்டு வெக்கலாமா என யோசித்துக்கொண்டும் நான் கடையை ஆராய ஆரம்பித்தேன். ஜாக்கும் தலையெழுத்தேன்னு பார்த்திட்டு இருந்தார்.

அப்போது அங்கு வெண்மை நிறத்தில் சங்கு வளையல்கள் அழகாய் மின்னிக் கொண்டிருக்க, “இதை வாங்கிகோயேன்” என்றார். நாம என்ன வேணாம்னா சொல்ல போறோம்!! ’நாம வங்காளிகள் பத்தி சொன்னதை கேட்டு பயபுள்ள மனசுல என்னமோ நெனச்சிருக்கு பாரேன்’ என்று யோசித்தவாறே, சரி என்று தலையாட்டி வைத்தேன்.

உடனே அந்த வளையல்களை வாங்கி என் இரண்டு கைகளிலும் மாட்டி விட்டு, “இப்போ நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு, வங்காள முறையில்” என்று பெருமை மினுங்க சொன்னார் தலைவர். இப்போ நெனைக்க கொஞ்சம் காமெடியா இருக்குதான். ஆனா அப்போ எனக்கு சந்தோஷம் புரிபடலை... ஆனாலும் அடுத்த சீன் சோகம்தான். கல்யாணம் ஆன அன்னிக்கே நாங்க ரெண்டு பேரும் அழுதுட்டே சாயந்திரம் பிரிஞ்சி, அவர் ஃப்ரெண்டோட நைட் ஷோ சினிமாக்கும், நான் வீட்டுக்கும் போயிட்டோம். இப்படியாக முதல் கல்யாணம் முடிஞ்சுது. அழுகாச்சி சீனா இருந்தாலும் அதெல்லாம் சேர்ந்ததுதானே


”ஜில்லுன்னு ஒரு காதல்”

Wednesday, February 16, 2011

ஊர் சுத்தலாம் வாங்க....

        

            தலைப்புல இருக்குற மாதிரி கூப்பிட்டது நானில்லீங்க. நம்ம ஜாக்கு தான். தலைவர் சென்னை வந்து பார்த்த இரண்டாம் மாதமே எப்படியோ கெஞ்சி கூத்தாடி, என்னை ஆஃபீஸ் பங்க் செய்ய வைத்து, ஊர் சுத்த சம்மதிக்க வைக்க வெச்சுட்டாரு. முதல் நாள் மாலை கடற்கரையில் கட்லை வறுபடும் போதே இதை சாதித்தாகி விட்டது. இந்த ஜாக்கு வேற சென்னைக்கு புதுசா... அடுத்த நாள் எங்க போறதுன்னு ரெண்டு பேருக்குமே தெரியலை. நாள் முழுக்க வேற சுத்தணுமா? அப்புறம் வி.ஜி.பி போகலாம்ன்னு எனக்கு தோணுச்சு. நமக்கு தீம்பார்க்ன்னா ரொம்ப பிடிக்கும் வேறயா? சரி அங்கயே போயிடுவோம்ன்னு ஜாக்கும் ஓகே சொல்லியாச்சு.... 

          சென்னையில் பயன்படுத்த பைக் எதுவும் இல்லாததால் பஸ்ஸில் தான் பயணம். எனக்கு இப்ப வரைக்கும் ட்ரைவிங்க் தெரியாததால்,(ஒரே பெருமை தான் போ) ஸ்கூட்டியும் கைவசம் லேது. எனவே அடுத்த நாள் பஸ்ஸில் போவதென்று முடிவு செய்தாகி விட்டது(ஏரியால அத்தனை ஆட்டோக்காரர்களுக்கும் என் அப்பாவை தெரியும். வேறு வழி?). சென்னையின் பீக் ட்ராஃபிக் நேரத்தில் 29c எப்படி இருக்குமென்பதை சென்னைவாசிகள் அறிவர்.  அந்த பஸ்ஸில் நாங்களும் நசுங்கி பிறயும் நசுக்கி  சைதாப்பேட்டையில் இறங்கி இன்னொரு பஸ்ஸை பிடித்து விஜிபி வந்து சேர்ந்தாயிற்று...

                 நாங்கள் 9.30மணிக்கே வேறு போய் விட்டோம். பின்னே நான் வீட்டிலிருந்து ஆஃபீஸ் கிளம்பற மாதிரி 7.30க்கே கிளம்பியாச்சே.... அங்கே அப்போதுதான் துப்புரவு பணியாளர்களே தங்கள் வேலையை தொடங்கியிருந்தன்ர். ‘விடிஞ்சா போதும் கெளம்பி வந்துருதுங்க’ என்பது போல எங்களை பார்த்துவிட்டு வேலையை தொடர்ந்தனர். நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம் போலத்தான் இருக்கும். இருந்தாலும் நாங்கள் அசருவோமா?? இத்தனையும் சமாளிச்சு உள்ளே போனால், வார நாட்களில் நிறைய ரைட்ஸ் இயக்க மாட்டார்களாம்... அங்க மொத்தம் இருக்கறதே பத்து ரைட்ஸ்தான்.

                         சரி ஏதாவது ரைட் ஆரம்பிக்கற வரைக்கும் சாப்பிடலாம் என்று அதையும் முடித்தோம். சில மணி நேரம் கழித்து பெங்காலி டூரிஸ்டுகள் வந்ததும் தான் ரோலர் கோஸ்டரை இயக்கினர். ரோலர் கோஸ்டரில் பலரும் அலறவும் இந்த ஜாக்கு அதில் ஏறவே ஒத்துக்கவில்லை. நான் மிகவும் வற்புறுத்தி ஏறி விட, நான் கத்தி கொண்டே வந்தேன். (நமக்கு சத்தம் போட்டாத்தேன் பயம் தெரியாது). மிக கம்பீரமாக ஏறிய ஜாக், சுத்தமாக சத்தம் போடவே இல்லை. இறங்கி பிறகுதான் அவர் முகத்தை பார்க்க விளக்கெண்ணெய் குடித்தது போல் இருந்தார் பாவம். அதற்கு பிறகு பல முறை விஜிபி போன போதும், எந்த ரைடுக்கு கூப்பிட்டாலும் ஜாக்கு என்னை கையெடுத்து கும்பிடுவதோடு சரி...