Wednesday, March 2, 2011

தபு சங்கர்கள் ஜாக்கிரதை!!!

நம் காதல் சொல்ல
புதுமொழியாய்
உன் புன்னகையும்;
என் கையெழுத்து!



அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!



உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை..,
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்துப் பார்க்கிறது!


வேறெவரும் தருவதற்கில்லை;
ஊராரும் பெறுவதற்கில்லை;
எனக்கே எனக்காய்
நீ!


மெல்லச் சிரிக்கிறாயா,
சோம்பல் முறிக்கிறாயா,
தெரியவில்லை;
இங்கு புரையேறித் துடிக்கிறது
காதல்!