Wednesday, March 2, 2011

தபு சங்கர்கள் ஜாக்கிரதை!!!

நம் காதல் சொல்ல
புதுமொழியாய்
உன் புன்னகையும்;
என் கையெழுத்து!



அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!



உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை..,
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்துப் பார்க்கிறது!


வேறெவரும் தருவதற்கில்லை;
ஊராரும் பெறுவதற்கில்லை;
எனக்கே எனக்காய்
நீ!


மெல்லச் சிரிக்கிறாயா,
சோம்பல் முறிக்கிறாயா,
தெரியவில்லை;
இங்கு புரையேறித் துடிக்கிறது
காதல்!

5 comments:

vinu said...

namma vootu pakkam varrathukkuthaan neramea illay polaaaaa.......

Jillu said...

itho vanthitten irunga

வால்பையன் said...

//அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!//


வாவ்!

இது யார் கவிதை!
ஜாக்கா, ஜில்லா!

Jillu said...

ஜாக்கு தான்.. ஜில்லுக்கு அவ்ளோ சரக்கில்ல

Jillu said...

ஜாக்கு தான்... ஜில்லுக்கு அந்தளவுக்கு சரக்கு பத்தாது